21 March 2007

4 போராளிகள்- 1 தமிழீழ காவல்துறை வீரரின் வீரச்சாவு

[செவ்வாய்க்கிழமை, 20 மார்ச் 2007, 18:03 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

தமிழீழ விடுதலைக்காக களப்பலியாகிய 4 போராளிகளினதும் தமிழீழ காவல்துறை வீரர் ஒருவரினதும் வீரச்சாவு அறிவித்தல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர்.

விபரம் வருமாறு:

11.03.07 இல் மட்டக்களப்பு மாவட்டம் பன்குடாச்சேனைப் பகுதியில் முன்னேறிய சிறிலங்கா இராணுத்தினருடன் இடம்பெற்ற நேரடி மோதலின் போது போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.

வீரவேங்கை சிவராம் என்று அழைக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பாலப்போடி ரவிச்சந்திரன் என்ற போராளியே வீரச்சாவடைந்தவர் ஆவார்.

18.03.07 இல் மட்டக்களப்பு உன்னிச்சை 8 ஆம் கட்டை பகுதியில் முன்னேறிய சிறிலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற நேரடி மோதலின் போது போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.

மேஜர் மாறன் என்று அழைக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தராஜா கனகராஜா என்ற போராளியே வீரச்சாவடைந்தவர் ஆவார்.

19.03.07 இல் யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற நேரடி மோதலின் போது போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.

2 ஆம் லெப். கணேசன் என்று அழைக்கப்படும் யாழ். மாவட்டத்தை சொந்த முகவரியாகவும் மருத்துவமனை வீதி அம்பலப்பெருமாள்குளம் அக்கராயனை தற்காலிக முகவரியாகவும் கொண்ட அப்துல் ஜபார் கணேசன் என்ற போராளியே வீரச்சாவடைந்தவர் ஆவார்.

19.03.07 இல் யாழ். தென்மராட்சி கிளாலிப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற நேரடி மோதலின் போது போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.

லெப். கதிர் என்று அழைக்கப்படும் ஜீவநகர் இடதுகரை முத்தையன்கட்டு ஒட்டுசுட்டானைச் சேர்ந்த பாலகிருஸ்ணன் மோகனதாஸ் என்ற போராளியே வீரச்சாவடைந்தவர் ஆவார்.

19.03.07 அன்று மன்னார் மாவட்டம் மடு சின்னத்தம்பனை பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற நேரடி மோதலின் போது தமிழீழ காவல்துறையின் தலைமைக்காவலர் ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.

தலைமைக்காவலன் நந்திவர்மன் என்று அழைக்கப்படும் திருகோணமலை மாவட்டத்தை சொந்த முகவரியாகவும் சீ.மாரியம்மா 6 ஆம் குறுக்கு ஆனைவிழுந்தான் கிளிநொச்சியை தற்காலிக முகவரியாகவும் இலக்கம் 18 இடைத்தங்கல் முகாம் வட்டுவாகலை வேறு முகவரியாகவும் கொண்ட கிருபாகரன் நந்திவர்மன் என்ற தலைமைக்காவலரே வீரச்சாவடைந்தவர் ஆவார்.

இம் மாவீரர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றனர்.

No comments: